Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சின், கோலி, டோனிக்குப் பிறகு அந்த சாதனையைப் படைக்கும் இந்திய வீரர் ஷுப்மன் கில்தான்!

சச்சின், கோலி, டோனிக்குப் பிறகு அந்த சாதனையைப் படைக்கும் இந்திய வீரர் ஷுப்மன் கில்தான்!
, வியாழன், 9 நவம்பர் 2023 (07:33 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக 92 ரன்கள் சேர்த்தார்.

இந்நிலையில் இப்போது அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 830 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாபர் ஆசாம் 824 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து சச்சின், தோனி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு தரவரிசையில் முதல் இடம் பிடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பென் ஸ்டோக்ஸ் அபார சதம்.. நெதர்லாந்துக்கு 300க்கும் மேல் இலக்கு..!