இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது. கே எல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் அவுட் ஆனதும் களத்துக்கு வந்த சாய் சுதர்சனுக்கு தமிழில் பேசி அட்வைஸ் கொடுத்தார் கே எல் ராகுல்.
இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்டம்ப் மைக் உரையாடலில் ராகுல் சாய் சுதர்சனிடம் “நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி” என தமிழில் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. ராகுல் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.