Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகும் கே எல் ராகுல்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (15:50 IST)
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு துணைக் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் விராட் கோலியும் ஒருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி 20 போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து விலகினார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டனாக நீடித்தார்.

ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அவரிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன்சியும் பிடிங்கப்பட்டு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலில் ‘கோலி தானாகவே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக 48 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர் செய்யாததால் நீக்கப்பட்டார்’ என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஒருநாள் அணிக்கு துணைக் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments