Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

vinoth
சனி, 31 மே 2025 (10:17 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதலில் நடந்த குவாலிஃபையர் போட்டியில் ஆர் சி பி அணி பஞ்சாப்பை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது.இதையடுத்து நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையருக்கு முன்னேறியுள்ளது.

இன்னும் இரு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் எந்த அணிக் கோப்பையை வெல்லப் போகிறது என்ற ஆருடங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.17 ஆண்டுகளாகக் கோப்பையை வெல்லாத ஆர் சி பி அணி வெல்லவேண்டும் என பல தரப்பு ரசிகர்களும் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கான சாதக பாதங்களையும் பட்டியலிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர் சி பி ரசிகர்கள் இப்போது ஒரு சுவாரஸ்யமான தகவலை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஜோஷ் ஹேசில்வுட் இதுவரை எந்தவொரு இறுதிப் போட்டியிலும் தோற்றதில்லை. இறுதிப் போட்டியில் அவர் இடம்பெற்ற அணிகள் 6 முறை வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளன. அதனால் இந்த முறை அவர் ஆர் சி பி அணியில் இருப்பதால் அந்த அதிர்ஷ்டம் தொடரும் என நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments