Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தலைவராக இருந்துகொண்டு ஜெய் ஷா இப்படி செய்யலாமா?... எழுந்த விமர்சனங்கள் !

vinoth
புதன், 5 மார்ச் 2025 (10:07 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பெற்று வந்த தொடர் தோல்விகளுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நேற்றைய போட்டியில்  ஆஸி அணி நிர்னயித்த 265 என்ற இலக்கைத் துரத்திய போது மிகவும் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார் ஆட்டநாயகன் கோலி. அவருக்குத் துணையாக கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் ஆட்டமும் அமைந்தது.

இந்திய அணி வெற்றி பெற்றபோது மைதானத்தில் இருந்த ஐசிசி தலைவரான ஜெய் ஷா அதை வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்தார். ஜெய் ஷா இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், ஐசிசி தலைவராக இருக்கும் போது எப்படி ஒரு அணியின் வெற்றியை அவர் இப்படிக் கொண்டாடி மகிழலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments