Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜடேஜாவா இப்படி…. அடுத்தடுத்து மிஸ் பீல்டு…. கடுப்பான ரசிகர்கள்!

ஜடேஜாவா இப்படி…. அடுத்தடுத்து மிஸ் பீல்டு…. கடுப்பான ரசிகர்கள்!
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (20:55 IST)
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.

ஐபிஎல் தொடரின் 33வது போட்டி இன்று மும்பை மற்றும் சென்னை அணிகள் இடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியதை எடுத்து சற்று முன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

இந்த நிலையில் முதல் ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.  இரண்டு பேர்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி 116 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா எளிதாக வந்த இரண்டு கேட்ச்களை கோட்டைவிட்டார். உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜடேஜா இப்படி மிஸ்பீல்ட் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்களை இழந்த மும்பை: ரோஹித் சர்மா, இஷான் கிஷான் டக்-அவுட்