Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரம்பமே மோசம்.. பவர்ப்ளேல வெச்சு செஞ்சிட்டாங்க..! – தோல்வி குறித்து ஜடேஜா விளக்கம்!

ஆரம்பமே மோசம்.. பவர்ப்ளேல வெச்சு செஞ்சிட்டாங்க..! – தோல்வி குறித்து ஜடேஜா விளக்கம்!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:24 IST)
நேற்றைய ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியுடன் மோதிய சென்னை அணி மோசமாக தோல்வியடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிக் கொண்டன. இதில் பஞ்சாப் அணி சென்னையை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஐபிஎல் தொடங்கி 3 போட்டிகளில் கலந்து கொண்ட சிஎஸ்கே மூன்றிலுமே தோல்வியை தழுவியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தோல்வி குறித்து விளக்கமளித்த கேப்டன் ஜடேஜா “ நாங்கள் பவர்-பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். முதல்பந்தில் இருந்தே ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வலுவாக மீண்டு வர நாங்கள் புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ச்சியாக 3வது தோல்வி: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி