Publish Date: Sat, 02 Apr 2022 (21:41 IST)
Updated Date: Sat, 02 Apr 2022 (21:44 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில், குஜராத் அணி டெல்லிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
புதிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் இன்று டெல்லியில் பந்துவீச்சியை சமாளிக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.
இதில் கில் 84 ரன்களும், விஜய் சங்கர் 13 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 31 ரன்களும, மில்லர் 20 ரன்களும், டிவெடா 14 ரன்களும் அடித்துள்ளனர்.
எனவே குஜராத் அனி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்து, டெல்லி அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளனர்.