Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

Advertiesment
இந்தியா vs இங்கிலாந்து

vinoth

, வெள்ளி, 25 ஜூலை 2025 (09:42 IST)
மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.

இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இஷான் கிஷான் அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரில் ஒருவர் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அணியில் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலில் அடிபட்டி ரிட்டையர்ட் ஹர் முறையில் வெளியேறினாலும் ரிஷப் பண்ட் மீண்டும் செய்யவந்து 10 ரன்கள் சேர்த்து அரைசத்தைப் பூர்த்தி செய்தார். அவர் பேட் செய்ய வந்த போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!