Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை இந்தியாவுக்கு மாற்ற பேச்சுவார்த்தையா?

vinoth
வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:46 IST)
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது. பாகிஸ்தான் சார்பாக பேசவேண்டிய ஐசிசி இந்திய அணி மூலமாக வரும் வருவாய்க் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கண்டிக்க அஞ்சுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதற்காக திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் ஒரு தொடரை திட்டமிட்டு நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தால் முடியும் என்பதால் இந்த ஆலோசனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments