Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி அட்டவணையில் இணைகிறது ஐபிஎல்! – பிசிசிஐ செயலாளர் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (13:27 IST)
இந்தியாவில் பிரபலமாக உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐசிசியின் பட்டியலில் இணைய உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2008ல் தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்களுடன் மற்ற நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடி வருகின்றனர்.

ஆனால் ஐபிஎல் போட்டிகள் ஐசிசியின் ”Future tour programme” பட்டியலில் இல்லாததால், பிறநாட்டு சுற்றுத் தொடர் போட்டிகள், ஐசிசி போட்டிகள் இல்லாத காலக்கட்டத்தை கணக்கிட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டியுள்ளது. மேலும் இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளது.

இந்நிலையில் விரைவில் ஐபிஎல் போட்டிகள் ஐசிசியின் அட்டவணையில் இணைக்கப்பட உள்ளதாகவும், அவ்வாறு இணைத்தபின் ஐபிஎல் நடைபெறும்போது வேறு சர்வதேச போட்டிகள் நடக்காது என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments