Publish Date: Wed, 06 Apr 2022 (22:03 IST)
Updated Date: Wed, 06 Apr 2022 (22:05 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், ரோஹித் சர்மா 3 ரன்களும் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கிஷான் 12 ரன்களும், டேவிட் 29 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும் , வர்மா 38 ரன்களும் , பொல்லார்ட் 22 ரன்களும் அடித்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 161 ரன்கள் எடுத்தும் கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
Sinoj
Publish Date: Wed, 06 Apr 2022 (22:03 IST)
Updated Date: Wed, 06 Apr 2022 (22:05 IST)