Publish Date: Thu, 01 Oct 2020 (23:28 IST)
Updated Date: Thu, 01 Oct 2020 (23:31 IST)
ஐபிஎல் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
எதிர்பாராத திருப்பு முனைகள் அதிரடிகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த வருடம் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்றது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், மும்பை அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் ரோஹித் சர்மா அவுட்டானார்.
இந்நிலையில் கடைசி 3 ஓவரில் மும்பை எடுத்தது 62 ரன்கள் எடுத்து படம் காட்டியது.எனவே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 191 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணிவீரர்கள் சோபிக்காததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இந்நிலையில் ஐபிஎல்லி 13 வது லீக்கில் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.