பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்தியா! சுப்மன் கில் சதம் வீண்!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (06:54 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சூப்பர் 4 கடைசி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து, இந்தியாவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் 80 ரன்களும், டோவிட் ஹ்ருதோய் 54 ரன்களும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்கள் விழுந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிலைத்து நின்று சதமடித்தார்.

அவர் களத்தில் இருக்கும் வரை இந்திய அணியின் வெற்றி எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்தது. ஆனால் அவர் அவுட் ஆனதும் அந்த நம்பிக்கை தகர்ந்தது. 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments