Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

Advertiesment
இந்திய அணி

vinoth

, வெள்ளி, 13 ஜூன் 2025 (16:25 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் போது தொடர்ந்து தோல்விகளைப் பெற்று வரும். ஆனால் தோனி மற்றும் கோலி கேப்டன்சியில் இந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்திய அணி தொடர்களை வென்றது.

ஆனால் இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் வெற்றி என்பது இந்த தொடரில் கேள்விக்குறியாகவுள்ளது. இங்கிலாந்தில் அனுபவமற்ற இந்திய அணிக்கு அனுபவமுள்ள கம்பீர் பயிற்சியாளராக இருப்பது அனுகூலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கம்பீர் அவசரமாக இந்தியா திரும்பவுள்ளார். குடும்ப அவசர சூழல் காரணமாக அவரின் இந்த திடீர் பயணம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் இங்கிலாந்து சென்று இந்திய அணியோடு இணைவார் என்று சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!