Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

இந்தியா
vinoth
சனி, 6 ஜூலை 2024 (18:16 IST)
உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இந்திய அணி பவுலர் ரவி பிஷ்னோய் மிகச்சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களும்,  முகேஷ்குமார் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஜிம்பாப்வே அணியில் க்ளைவ் மடாண்டே அதிகபட்சமாக 29 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments