இந்தியா vs ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சிகள்!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (08:41 IST)
இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த தொடருக்கான அணியில் கே எல் ராகுல் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷிகார் தவான் தற்போது துணைக் கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டிகளை ஒளிபரப்ப எந்த முன்னணி தொலைக்காட்சி சேனல்களும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஜிம்பாப்வேக்கு எதிராக நட்சத்திர வீரர்கள் இல்லாத அணி விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்காது என சொல்லப்படுகிறது. இதனால் போட்டிகளை தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரும் இதுபோல தூர்தர்ஷனில்தான் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

உலகக் கோப்பை தகுதி சுற்றில் அதிக கோல்கள்… ரொனால்டோ படைத்த சாதனை!

டெல்லி கேப்பிடல்ஸில் இருந்து விலகுகிறாரா கே எல் ராகுல்?... ட்ரேட் செய்ய ஆர்வம் காட்டும் அணி!

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

அடுத்த கட்டுரையில்
Show comments