Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

vinoth

, செவ்வாய், 25 ஜூன் 2024 (14:52 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் இருந்து அடுத்த கட்டத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று நடந்த கடைசி சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி வங்கதேசத்தை வீழ்த்தியது.

இந்நிலையில் ஜூன் 27 ஆம் தேதி நடக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி நடக்கும் மைதானத்தில் அன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை அன்று மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் செல்லும். ஏனென்றால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் அதிக ரன்ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!