Publish Date: Fri, 09 Jul 2021 (22:42 IST)
Updated Date: Fri, 09 Jul 2021 (22:56 IST)
இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை- இந்தியா அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.