Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Prasanth Karthick
வியாழன், 30 மே 2024 (11:05 IST)
அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு தீவிரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 போட்டிகளை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகிறது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், அரையிறுதி, இறுதி போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளில் பிரிவுக்கு 5 அணிகள் என மொத்தம் 20 அணிகள் இந்த போட்டிகளில் மோதிக் கொள்கின்றன.

இதில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் இந்த போட்டிக்கு மற்ற போட்டிகளை விட கூடுதல் பாதுகாப்பை வழங்க நியூயார்க் போலீஸ் முடிவு செய்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments