Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் மூன்று கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும்- கம்பீர் ஆசை!

இன்னும் மூன்று கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும்- கம்பீர் ஆசை!

vinoth

, வியாழன், 30 மே 2024 (08:52 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனால் அவர் தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார். அவர் வந்த பின்னர் அந்த அணி புத்துணர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் இறுதியோடு முடிவடைகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐயின் லிஸ்ட்டில் கவுதம் கம்பீரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கம்பீர் தற்போது கொல்கத்தா அணி பற்றி பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அவர் “கொல்கத்தா அணி இன்னும் மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும் என்பதே என் ஆசை” என்க கூறியுள்ளார். இதனால் அவர் இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலியை விமர்சித்தால் உங்களுக்கு கொலை மிரட்டல் வரும்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!