Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா அபார தொடக்கம்: 4 விக்கெட்டை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி!

இந்தியா அபார தொடக்கம்: 4 விக்கெட்டை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி!

இந்தியா அபார தொடக்கம்: 4 விக்கெட்டை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி!
, சனி, 26 நவம்பர் 2016 (12:05 IST)
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததையடுத்து, இரண்டாவது டெஸ்டில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.


 
 
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. எதிர்பார்த்தது போலவே இரு அணிகளிலும் வீரர்களில் ஒரு சில மாற்றங்கள் இருந்தது.
 
முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர் ஹமீத்தை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீழ்த்த கேப்டன் குக்கை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினார். அதன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்தின் நம்பிக்கை நாயகன் ஜோ ரூட்டின் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் கைப்பற்றினார்.
 
பின்னர் களம் கண்ட மொயின் அலியும் முகமது சமியின் வேகத்தில் விக்கெட் பறிகொடுக்க அந்த அணி உணவு இடைவேளைக்குள் 92 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய்னாவை முந்திய சிந்து: எதில் தெரியுமா??