Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐசிசியிடம் அபராத புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் மைதானம்… காரணம் இதுதான்!

ஐசிசியிடம் அபராத புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் மைதானம்… காரணம் இதுதான்!
, புதன், 14 டிசம்பர் 2022 (09:13 IST)
சமீபத்தில் ராவல்பிண்டி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி அதிக ஸ்கொர் கொண்ட போட்டியாக சென்றது.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச போட்டிகள் விளையாடுவது குறைந்துள்ளது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அணிகள் அங்கு சென்று விளையாட ஆரம்பித்துள்ள நிலையில் அந்நாட்டின் முக்கிய மைதானங்களில் ஒன்றான ராவல்பிண்டி மைதானம் இப்போது ஐசிசி- ஆல் அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அந்த மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிதான். இந்த போட்டியில் சுத்தமாக ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்த போட்டியில் 1200க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டன.

இந்நிலையில் இப்போது இந்த மைதானத்துக்கு ஐசிசி 2 அபராத புள்ளிகளை விதித்துள்ளது. இதையடுத்து மேலும் அந்த ஆடுகளம் அபராதப் புள்ளிகள் பெறுமானால் சர்வதேசப் போட்டிகள் விளையாடுவது ரத்து செய்யப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாவது டெஸ்ட்டிலாவது விளையாடுவாரா ரோஹித் ஷர்மா? – கே எல் ராகுல் தகவல்!