Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் போடும் முறை தொடரும்: ஐசிசி முடிவு!

டாஸ் போடும் முறை தொடரும்: ஐசிசி முடிவு!
, புதன், 30 மே 2018 (15:26 IST)
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும் முறை தொடரும் என ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
 
கிரிக்கெட் போட்டியின் போது எந்த அணி பேட் செய்ய வேண்டும் எந்த அணி பவுல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய பல காலமாக டாஸ் போட்டு வருவது வழக்கமானது. 
 
ஆனால், தற்போது போட்டிக்கு முன்னர் இனி ஏன் டாஸ் போட வேண்டும் என்பது போல டாஸ் நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்க ஐசிசி தீவிர ஆலோசனை செய்து வந்தது.
 
இந்த நிலையில் நேற்று நடந்த ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறை தொடரும் என முடிவு செய்யப்பட்டது.
webdunia
 
மேலும், பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு கைகொடுக்கும் வகையில் ஆடுகளம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், போட்டியின் போது வீரர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவில்லியர்ஸின் ஓய்வு தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பு- கிரேம் ஸ்மித்