தண்ணி கேன் போட வந்தேன்.. மேட்ச் விளையாட சொன்னாங்க! – கே.எல்.ராகுல்!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (13:22 IST)
நேற்று நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் தனக்கு வாய்ப்பு கிடைத்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.



ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் – இந்தியா அணிகள் மோதும் போட்டி தொடங்கியது. ரோகித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் ஆளுக்கு ஒரு அரை சதம் வீழ்த்தி விக்கெட்டை இழந்த நிலையில் மழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் களம் இறங்கிய விராட் கோலியும், கே.எல்.ராகுலும் வரலாறு காணாத பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை பந்தாடி ரன்களை குவித்தனர். இந்த போட்டியில் 100 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்து நீண்ட காலம் கழித்து மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் கே.எல்.ராகுல்.

இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய கே.எல்.ராகுல் “போட்டிக்கான டாஸ் போடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னாள் ‘நீ இந்த போட்டியில் விளையாடுகிறாய்’ என அணி பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் சொன்னார். நான் மைதானத்திற்கு எந்த உபகரணங்களையும் எடுத்து வரவில்லை. வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையைதான் செய்வேன் என நினைத்து வந்தேன்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments