Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு ஒரேயொரு கேப்டன் போதுமா? பிரபலம் அளித்த பதில் !

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (09:46 IST)
உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளைப் போல இந்தியாவுக்கும் மூன்று வடிவிலான போட்டிகளுக்கு மூன்று கேப்டன்கள் தேவை என்ற குரல் எழுந்து வருகிறது.

உலகில் கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளும் தற்போது தங்கள் கிரிக்கெட் அணிகளுக்கு ஒவ்வொரு வடிவிலான விளையாட்டுகளுக்கும் மூன்று கேப்டன்களை நியமித்துள்ளார். இதன் மூலம் கேப்டன்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கோலிதான் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் ஷர்மாவை டி 20 அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் எனக் கருத்துகள் எழுந்துவருகின்றன. இதுகுறித்து வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘இந்திய அணிக்கு கோஹ்லி, ரோகித் என இருவரையும் கேப்டனாக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கோலியை பொறுத்தவரை கேப்டனாக வேண்டும் என்றே, இவர் பிறந்துள்ளார் போல உள்ளது. ரோஹித் மும்பை அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கோஹ்லி இல்லாத போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு வெற்றியும் தேடித்தந்துள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு ஒரு கேப்டன் மட்டும் இருக்க வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments