Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டம்புகளை உடைத்து ஆவேசம்.. ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அபராதம்! – நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (12:11 IST)
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆவேசமாக நடந்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்திய – வங்கதேசம் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு போட்டியை வென்றிருந்த நிலையில் கடைசி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த கடைசி போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடியபோது நடுவர் கொடுத்த LBW ஆல் அவர் அவுட் ஆகி வெளியேற்றப்பட்டார். அந்த ஆவேசத்தில் அவர் அங்கிருந்த ஸ்டம்புகளை பேட்டால் அடித்து விளாசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த போட்டி ட்ராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. அதை பெறுவதற்காக வங்கதேச அணி வீராங்கனைகள் வந்து நின்றபோது, அவர்களிடம் ஹர்மன்ப்ரீத் கவுர் “உங்கள் வெற்றிக்காக பாடுபட்டு உழைத்த நடுவர்களையும் அழைத்து வாருங்கள்” என உசுப்பேற்றும் விதமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த வங்கதேச வீராங்கனைகள் அணி அங்கிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுரிக்கு போட்டிகான ஊதிய தொகையில் இருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments