Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரவி சாஸ்திரிக்கு காட்டமான பதில் சொன்ன ஹர்பஜன் சிங்!

Advertiesment
ரவி சாஸ்திரி
, வியாழன், 27 ஜனவரி 2022 (15:27 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது பல்வேறு கருத்துகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போது கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் துறந்தார். இந்நிலையில் இது சம்மந்தமாக இப்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ’நிச்சயமாக கோலி இன்னும் 2 ஆண்டுகள் வரை இந்திய அணியின் கேப்டனாக நீடித்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் சொந்த மண்ணில் நிறைய டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அப்படி அவர் தொடர்ந்திருந்தால் அவர் தலைமையின் கீழ் 50 முதல் 60 வெற்றிகளை அவர் பெற்றிருப்பார். ஆனால் அது சிலருக்கு அதை ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் நீண்ட காலமாக அணியை வழிநடத்தியவர் என்ற முறையில் அவரின் முடிவை நாம் மதிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரியின் இந்த கருத்துகள் வலுவான கண்டனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பதிலில் ‘கோலி இன்னும் வெற்றிகள் அதை ஜீரணிக்க மாட்டார்கள் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார், அவர் யாரை கூறுகிறார் என்று தெரியவில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பேட்ஸ்மேன்களின் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. பேட்ஸ்மேன்கள் அதிகமாக ரன்கள் குவிக்காததால் அவர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்லா பர்பார்ம் பண்ணியும் அணியில் இருந்து தூக்கப்பட்ட அஸ்வின்!