Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலி இன்னும் இரு ஆண்டுகள் பொறுமையாக இருந்திருக்கலாம்… ரவி சாஸ்திரி கருத்து!

கோலி இன்னும் இரு ஆண்டுகள் பொறுமையாக இருந்திருக்கலாம்… ரவி சாஸ்திரி கருத்து!
, திங்கள், 24 ஜனவரி 2022 (15:56 IST)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கோலியின் முடிவு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது பல்வேறு கருத்துகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போது கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் துறந்தார். இந்நிலையில் இது சம்மந்தமாக இப்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ’நிச்சயமாக கோலி இன்னும் 2 ஆண்டுகள் வரை இந்திய அணியின் கேப்டனாக நீடித்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் சொந்த மண்ணில் நிறைய டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அப்படி அவர் தொடர்ந்திருந்தால் அவர் தலைமையின் கீழ் 50 முதல் 60 வெற்றிகளை அவர் பெற்றிருப்பார். ஆனால் அது சிலருக்கு அதை ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் நீண்ட காலமாக அணியை வழிநடத்தியவர் என்ற முறையில் அவரின் முடிவை நாம் மதிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பையில் நடக்க வாய்ப்பு!