Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்தை கேப்டனாக்காதது வெட்கக்கேடு – கவுதம் கம்பீர் கேள்வி!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (09:08 IST)
மும்பை அணி ரோஹித் ஷர்மா தலைமையில் 5 ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

பரபரப்பாக நடந்த முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணி டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கோலியை விட ரோஹித்தே சிறந்த கேப்டன் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இன்னமும் ரோஹித் சர்மாவை நியமிக்காதது வெட்கக்கேடு. அப்படி அவருக்கு அளிக்கவில்லை என்றால் அது இந்திய அணிக்குதான் துரதிர்ஷ்டம். ஒருவரை கேப்டனாக நியமிக்க அளவுகோல்கள் என்ன என்று தெரியவில்லை? ரோஹித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதனால் விராட் கோலியை ஒரு வடிவத்துக்கும் ரோஹித்தை ஒரு வடிவத்துக்கும் கேப்டனாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

நைட் வாட்ச்மேனை பலிகொடுத்த கே எல் ராகுல்… சரியா தவறா?- ரசிகர்கள் காரசார விவாதம்!

வாழ்க்கை நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்து செல்கிறது.. கணவரை பிரிந்ததாக அறிவித்த சாய்னா நேவால்

அடுத்த கட்டுரையில்
Show comments