Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாடல் நகரை மையப்படுத்தி ஐபிஎல் தொடரில் புதிய டீம்? – அடுத்த சீசனில் களமிறக்க முடிவு!

Advertiesment
IPL. BCCI
, புதன், 11 நவம்பர் 2020 (08:16 IST)
ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகளில் புதியதாக ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிசிசிஐயின் ஐபிஎல் டி20 போட்டிகள் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 2008 முதலாக தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற பல அணிகள் ஐபிஎல் ஆரம்பம் தொட்டே இருந்து வந்தாலும், இடையே டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் போன்ற சில அணிகள் வந்து பின்னர் காணாமல் போயின.

தற்போது ஐபிஎல் தொடரில் மொத்தமாக 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் 9வது அணி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த மாநிலமான குஜராத்தை மையப்படுத்தி அந்த அணி உருவாக்கப்பட இருப்பதாகவும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஐ;பிஎல் வீரர்கள் ஏலத்தின்போது இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பர்ப்பிள் கேப் இல்லை, ஆரஞ்சு கேப் இல்லை, ஆனாலும் சாம்பியன் ஆனது மும்பை!