Publish Date: Tue, 13 Jul 2021 (12:34 IST)
Updated Date: Tue, 13 Jul 2021 (13:19 IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா (66) மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
லூதியானாவில் இறந்த யாஷ்பால் ஷர்மா, கடந்த 1983ஆம் உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்திய அணிக்காக 37 டெஸ்ட், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள யாஷ்பால் சர்மா, 2,489 ரன்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.