Publish Date: Fri, 01 Oct 2021 (15:19 IST)
Updated Date: Fri, 01 Oct 2021 (15:21 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஏதுவாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ்கெயில் அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெயில். இவர் தற்போது பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரராக உள்ளார். இவர் மைதானத்தில் இறங்கிவிட்டாலே பந்து வீச்சாளருக்கு சிரமம் தான்.
இவரது அதிரடியால் போட்டி எப்போது வேண்டுமானாலும் திசை மாறலாம் என நிலைக்குச் செல்லும். இந்நிலையில், அடுத்த மாதம் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஏதுவாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெயில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.