Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

Prasanth Karthick
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (15:48 IST)

ஐபிஎல் போட்டிகளில் இன்று சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ள உள்ள நிலையில் சிஎஸ்கே குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளது வைரலாகியுள்ளது.

 

ஐபிஎல் போட்டிகளில் இன்று க்ரேட் ரிவால்ரி போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த சீசனில் முதலிலேயே மோதிக் கொண்ட இந்த இரு அணிகளில் சிஎஸ்கே அப்போது வென்றது. அந்த வெற்றிக்கு இன்று வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

 

இதற்கிடையே மும்பையில் தோனியின் ஆதிக்கம் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது முழுக்க முழுக்க அங்கே சிஎஸ்கே ரசிகர்கள்தான் இருப்பார்கள். மும்பை ரசிகர்களை பார்க்கவே முடியாது. அதேபோல வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடந்தாலும் கூட பாதிக்கு பாதி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்தான் இருக்கிறார்கள். மஹி பாய் (தோனி) சில சமயங்களில் மும்பை ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து சிஎஸ்கே ரசிகராக மாற்றிவிடுகிறார்” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments