Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

Prasanth Karthick
சனி, 24 மே 2025 (07:51 IST)

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதி அபார வெற்றி பெற்றுள்ளது.

 

பரபரப்பாக நடந்து வரும் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று ஆர்சிபி, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போட்டிகள் ஒரு ஃபார்மாலிட்டிக்காக நடப்பது போல அமைந்தாலும், அதிலும் தகுதி பெறாத அணிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. 

 

நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்களை குவித்தார். தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய ஆர்சிபியை கடுமையாக கண்ட்ரோல் செய்தது சன்ரைசர்ஸ்.

 

பில் சால்ட் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் காலியான பிறகு மற்ற அனைவரும் குறைவான ரன்களில் அவுட் ஆனார்கள். 19.5 ஓவர்களுக்கெல்லாம் மொத்த விக்கெட்டுகளையும் இழந்த ஆர்சிபி அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் அவுட் ஆனது.

 

நேற்றைய போட்டியில் ஆர்சிபி வென்றிருந்தால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைத் தொட வாய்ப்பிருந்த நிலையில் இந்த தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments