Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையின் இறுதியில் அஸ்வின் சரியாக விளையாட வில்லை – தினேஷ் கார்த்திக்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (10:04 IST)
2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரின் அணித்தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த தொடர் முழுவதும் சஹாலுக்கு வாய்ப்பளிக்கப் படாதது கேள்விகளை எழுப்பின.

இந்நிலையில் இந்திய அணிக்காக டி 20 உலகக்கோப்பையில் சில போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் அதை குறிப்பிட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் “அணியில் வீரர்கள் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வீரர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்தது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் தொடரின் இறுதியில் சிறப்பாக விளையாடவில்லை.  அணியில் சஹால் இடம்பெற்றிருந்தால், அவர் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments