Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நாள் போட்டிகளில் முக்கியத்துவம் பெரும் ஹர்திக் பாண்ட்யா… தினேஷ் கார்த்திக் சொல்லும் கருத்து!

Advertiesment
Kl rahul
, வெள்ளி, 30 டிசம்பர் 2022 (09:17 IST)
இந்திய ஒரு நாள் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த தொடரில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்துள்ளது. டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுலிடம் இருந்து அந்த பொறுப்பு விலக்கப்பட்டுள்ளது. டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல ஒரு நாள் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள தினேஷ் கார்த்திக் “பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவு நுணுக்கமானது மற்றும் முக்கியமானது. 50 ஓவர் உலகக்கோப்பையைக் கணக்கில் கொண்டே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார். அதனால் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் வேண்டாம்… கோலி கண்டிப்பா வேணும்- முன்னாள் வீரர் கோபம்!