Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்க ரெண்டு பேரும் இருந்திருந்தா 18 ஓவர்லயே முடிச்சிருப்பாங்க… தோனி பாராட்டு!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:30 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் டூபிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது.

ஆனால் அவர்கள் இருவரும் அவுட் ஆனவுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறியதால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது கிளன் மேக்ஸ்வெல் மற்றும் பாஃப் டு பிளஸ்ஸி ஆகிய இருவரும் பேட்டிங் செய்த போது சி எஸ் கே பவுலர்களை தண்ணீர் குடிக்கவைத்தனர். அவர்கள் இருவரும் பேட் செய்த போது ரன் ரேட் 12 பக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் விக்கெட்களை இழந்தபின்னர் வழக்கம்போல பெங்களூர் அணி சொதப்ப ஆரம்பித்தது.

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் தோனி “மேக்ஸ்வெல்லும், டு பிளஸ்சியும் களத்தில் இருந்திருந்தால், 18 ஓவரில் போட்டியை முடித்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

பார்படாஸ் மைதான புற்களைத் தின்றது ஏன்?... ரோஹித் ஷர்மாவின் எமோஷனல் பதில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments