Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் தோனி

Advertiesment
ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் தோனி
, திங்கள், 17 ஏப்ரல் 2023 (18:25 IST)
ஐபிஎல் -2023, 16 வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த நிலையில், எந்த அணி கோப்பையைக்  கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்லது.

சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 200 வது போட்டிகளுக்கு மேல் கேப்டனாக செயல்பட்டடுள்ளார்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 200 போட்டிகளில்,120ல் வெற்றியும், 79 தோல்வியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று தெரியவில்லை.

இந்த ஆண்டுடன் தோனி  ஓய்வு பெறுவார் என்ற தகவல்களும் பரவி வந்த நிலையில், சென்னை அணியின் சி.இ.ஓ தோனி தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஓய்வு குறித்து தோனியிடம் கேட்டதற்கு, இதுபற்றி முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. நிறைய ஆட்டங்கள் உள்ளன. இப்போது இபதுபற்றி கூறினால், அணியின் பயிற்சியாளருக்குத்தான் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அர்ஜூன் டெண்டுல்கருக்கும், சச்சினுக்கும் என் வாழ்த்துகள்’’ - சூப்பர் ஸ்டார் டுவீட்