Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே போட்டி தேதி திடீர் மாற்றம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! – காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:26 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடக்க இருந்த ஐபிஎல் லீக் போட்டி திடீரென தேதி மாற்றப்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகளில் 10 அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளில் வரும் மே 4ம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதும் லீக் போட்டி லக்னோவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 3ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோவை பந்தாடி வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க லக்னோ முயலுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

இந்நிலையில் மே 4ம் தேதி நடக்க இருந்த சிஎஸ்கே – லக்னோ லீக் போட்டி முன்கூட்டியே மே 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் மே4ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் போட்டிகள் முன்கூட்டியே நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே போட்டி நடைபெறுவது டிவியில் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், பலர் இந்த மேட்ச்சை மைதானத்தில் காண திட்டமிட்டு பயண டிக்கெட் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்பே போட்டி நடப்பது சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments