Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே போட்டி தேதி திடீர் மாற்றம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! – காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:26 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடக்க இருந்த ஐபிஎல் லீக் போட்டி திடீரென தேதி மாற்றப்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகளில் 10 அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளில் வரும் மே 4ம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதும் லீக் போட்டி லக்னோவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 3ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோவை பந்தாடி வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க லக்னோ முயலுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

இந்நிலையில் மே 4ம் தேதி நடக்க இருந்த சிஎஸ்கே – லக்னோ லீக் போட்டி முன்கூட்டியே மே 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் மே4ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் போட்டிகள் முன்கூட்டியே நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே போட்டி நடைபெறுவது டிவியில் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், பலர் இந்த மேட்ச்சை மைதானத்தில் காண திட்டமிட்டு பயண டிக்கெட் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்பே போட்டி நடப்பது சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments