Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் விளையாடினால் கிரிக்கெட் மறந்துவிடும்… டேல் ஸ்டெய்ன் தாக்குதல்!

ஐபிஎல்  விளையாடினால் கிரிக்கெட் மறந்துவிடும்… டேல் ஸ்டெய்ன் தாக்குதல்!
, புதன், 3 மார்ச் 2021 (09:07 IST)
ஐபிஎல் தொடரில் விளையாடினால் கிரிக்கெட் மறந்துவிடும் என தென்னாப்பிரிக்கா முன்னாள் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த எகானமியில் அதிக விக்கெட் பந்துவீச்சாளர் என்றால் அது டேல் ஸ்டெயின்தான். அவரின் எகானமி 6.91 தான். ஆனால் கடந்த சில தொடர்களாக அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மேலும் அவரும் சிறப்பாக பந்துவீசவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இப்போது எஸ்பிஎல் மற்றும் பிசிஎல் ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது ஏன் என அவர் கூறியுள்ளார். அதில் ‘ஐபிஎல் தொடரில் விளையாடினால் கிரிக்கெட் மறந்துபோகும். அங்கு எல்லோருமே இந்த ஆண்டு எவ்வளவு பணம் சம்பாதிப்போம் என்பது குறித்தே யோசிப்பார்கள். அதனால்தான் அதிலிருந்து விலகி கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொடர்களில் விளையாட உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகமதாபாத் மைதானத்தை தொடர்ந்து கிண்டல் செய்யும் இங்கிலாந்து வீரர்!