Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அபார வெற்றி… முதல் ஆளாக ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து நடையைக் கட்டிய சிஎஸ்கே!

vinoth
வியாழன், 1 மே 2025 (06:47 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ருத்துராஜ் வெளியேறிய பிறகு கேப்டன் பொறுப்பேற்ற தோனியாவது அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அணியின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை, சாம் கரணின் அதிரடியால் 190 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் அணியின் சாஹல் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு பேட் செய்த பஞ்சாப் அணியும் அதிரடியாக ஆடி இலக்கை எட்டியது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் சேர்த்தார். இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments