Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாப் அபார வெற்றி… முதல் ஆளாக ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து நடையைக் கட்டிய சிஎஸ்கே!

Advertiesment
சிஎஸ்கே

vinoth

, வியாழன், 1 மே 2025 (06:47 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ருத்துராஜ் வெளியேறிய பிறகு கேப்டன் பொறுப்பேற்ற தோனியாவது அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அணியின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை, சாம் கரணின் அதிரடியால் 190 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் அணியின் சாஹல் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு பேட் செய்த பஞ்சாப் அணியும் அதிரடியாக ஆடி இலக்கை எட்டியது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் சேர்த்தார். இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்ட முடிவிலாவது மாற்றம் வருமா?