Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ பொம்மலாட்டம் இப்படிதான் இருக்குமா? – இந்திய கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த மனோஜ் திவாரி!

ஓ பொம்மலாட்டம் இப்படிதான் இருக்குமா? – இந்திய கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த மனோஜ் திவாரி!
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:37 IST)
விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிவிட்டு வரும் நிலையில் இந்திய வீரர் மனோஜ் திவாரியின் ட்வீட் வைரலாகியுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து கூறிய நிலையில் இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்ற ரீதியில் இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக சச்சின், ரோகித் ஷர்மா, கோலி உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இதுகுறித்து பதிவிட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்டத்தை பார்த்ததில்லை. பொம்மலாட்டத்தை காண எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியாக பதிவிடுவதைதான் அவர் அவ்வாறாக குறிப்பிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் இவரு..? பவுலரா? ஸோம்பியா? – பேட்ஸ்மேன்களை பீதிக்குள்ளாக்கிய கெவின் கொத்திகோடா!