Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் ஒரு சீசனின் கேப்டனாக விளையாட முடியாதா?....கான்வேயின் ஆசைக்கு பதில் கூறிய தோனி!

இன்னும் ஒரு சீசனின் கேப்டனாக விளையாட முடியாதா?....கான்வேயின் ஆசைக்கு   பதில் கூறிய தோனி!
, வியாழன், 31 மார்ச் 2022 (21:11 IST)
இன்னும் ஒரு சீசன் கேப்டனாக விளையாட முடியாதா என பிரபல வீரர் கான்வே தன் ஆசையை வெளிப்படுத்திய நிலையில், தோனி இதற்கு கூலாக பதில் அளித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பொறுப்பு இப்போது ரவீந்தர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனி ஒரு வீரராக அணிக்குள் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக தோனி மட்டுமே 12 சீசன்களாக பொறுப்பேற்றிருந்தார். அதில் 4 சீசன்களில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரே ஒரு முறை தவிர மற்ற அனைத்து தடவையும் ப்ளே ஆஃப் சுற்றை தாண்டி சென்றுள்ளது.

தற்போது 40 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் சி எஸ் கே அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதால் இதுவே கடைசி சீசனாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக அணியை தயார் படுத்தவே தோனி இருக்கும்போதே ஜடேஜாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,   தோனி தலைமையில் நான் சென்னை கிங்ஸ் அணியில் விளையாட ஆசைப்படுகிறேன்…இன்னும் ஒரு சீசன் கேப்டனாக விளையாட முடியாதா என பிரபல வீரர் கான்வே தன் ஆசையை வெளிப்படுத்தினார்.

இதற்கு, முன்னாள் கேப்டன் தோனி கூலாகப் பதில் அளித்துள்ளார். அதில், நான் நிச்சயமாக என்னால் விளையாட முடியாது; ஆனால், நான் உங்களைச் சுற்றியே  தான் இருப்பேன் என தோனி கூலாக பதில் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளுத்து வாங்கும் உத்தப்பா-மொயின் அலி: 6 ஓவர்களில் 73 ரன்கள்!