Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா; மருத்துவமனையில் சிகிச்சை! - என்ன ஆச்சு?

Prasanth Karthick
சனி, 4 ஜனவரி 2025 (09:55 IST)

ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஜாஸ்பிரித் பும்ரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை மளமளவென சரித்த இந்திய அணி 181 ரன்களில் ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் ஆக்கியது.

 

இந்த டெஸ்ட்டின் இன்றைய இரண்டாம் நாள் போட்டியின் உணவு இடைவேளை நேரத்தில் திடீரென மைதானத்தை விட்டு இந்திய அணியின் கேப்டன் பும்ரா வெளியேறியுள்ளார். சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், முதல் டெஸ்ட்டை கேப்டனாக இருந்து வென்று கொடுத்த பும்ரா இந்த டெஸ்ட்டிற்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மா தானாக முன்வந்து இந்த டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் பும்ராவின் இந்த நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments