Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பும்ராவிடம் புலம்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்

பும்ராவிடம் புலம்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்
, சனி, 21 ஆகஸ்ட் 2021 (00:35 IST)
சமீபத்தில் இந்தியா  - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்திய அணியைச் சர்வ சாதாரணமாக நினைத்த இங்கிலாந்து அணிக்குத் தக்கப் பதிலடி கிடைத்துள்ளதாக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்தனர்.

எனவே, வரும் 3 வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் 15 வீரர்களைக் கொண்ட புதிய அணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், லார்ட்ஸ்-ல்  நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய பந்து வீச்சாளர் பும்ரா, மற்ற வீரர்களுக்கு மட்டும் 136 கிமீ வேகத்தில் வீசிவிட்டு, தனக்கு மட்டும் 145 கிமீ வேகத்தில் வீசியதாகக் கூறி பும்ராவிடமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்  ஆண்டர்சன் புலம்பியுள்ளதகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றே கணித்த விராட் கோலி...