Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணர்ச்சி வேலை செய்தது… அறிவு ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்டது… இங்கிலாந்து அணியை கழுவி ஊற்றும் ஊடகங்கள்!

உணர்ச்சி வேலை செய்தது… அறிவு ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்டது… இங்கிலாந்து அணியை கழுவி ஊற்றும் ஊடகங்கள்!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:12 IST)
லார்ட்ஸ் டெஸ்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 12ஆம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முடிவடைந்தது என்பதும் இந்த போட்டியில் இந்தியா அபாரமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதையும் பார்த்தோம். இந்த போட்டிக்கே திருப்புமுனையாக பூம்ரா மற்றும் ஷிமியின் 20 ஓவர் ஆட்டம் அமைந்தது.

ஆனால் அப்போது அவர்கள் விக்கெட்டை எடுக்காமல் இங்கிலாந்து வீரர்கள் அவர்களுக்கு பவுன்சர் போட்டு தாக்க வேண்டும் என செயல்பட்டனர். இதை ரூட்டும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது.

இந்நிலையில் ஐந்தாம் நாளில் பந்துவீச்சாளர்கள் உணர்ச்சிகரமாக செயல்பட்டதாகவும் அதுவே தோல்விக்கு காரணம் என்றும் இங்கிலாந்து ஊடகங்கள் சாடியுள்ளன. பந்துவீச்சாளர்கள் ஆத்திரம் அடைந்தாலும் கேப்டன் ரூட் அவர்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சாடியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர் - ஒடிசா அரசு!