Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா பும்ரா?... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

vinoth
சனி, 8 மார்ச் 2025 (14:03 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அந்த தொடரில் மட்டும் அவர் 32 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் தற்காலக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவாகியுள்ளார்.

ஆனால் அந்த தொடரின் இறுதிப் போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாகக் குணமாகததால், நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இம்மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடர் முதல் இரண்டு வாரங்கள் அவர் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments