Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் சொன்னால்தான் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியும்.. அதிர்ச்சி தகவல்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (07:21 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பும்ராவை சோதித்து அவர் விளையாடலாம் என்று சொன்னால் மட்டுமே இந்த தொடரில் அவர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

ஒருவேளை பும்ரா களமிறங்காத பட்சத்தில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. பும்ரா தன்னுடைய தனித்துவமான பவுலிங் ஸ்டைல் காரணமாக அடிக்கடி காயமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments